லாரி மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள நெடுங்கூர் வடக்கு தெருவில் கூலி தொழிலாளியான துரைராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளை அப்பகுதியில் இருக்கும் சாலையோரம் நிறுத்திவிட்டு கடைக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி துரைராஜ் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த துரைராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி துரைராஜ் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.