தொலைக்காட்சி கோபுரத்தின் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா இடையே நடக்கும் போரானது எப்பொழுது முடிவுக்கு வரும் என்று அனைத்து நாடுகளும் கவலைப்படும் இவ்வேளையில் ரஷ்யப் படைகள் நாளுக்குநாள் தங்களுடைய தாக்குதலை அதிகப்படுத்திக் கொண்டே வருகின்றனர். இந்த தாக்குதலால் உக்ரேனில் பல நகரங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றது. மேலும் ரஷ்ய படையினர் உக்ரைனில் வான் வழியாகவும் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி பெரும்பாலான நகரங்களை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உக்ரைனின் ரிவ்னே நகரில் அமைந்துள்ள தொலைக்காட்சி கோபுரத்தின் மீது ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ரிவ்னே மாகாணத்தின் ஆளுநர் விட்டலி கோவல் கூறியதாவது “ரஷ்ய படையினர் தொலைக்காட்சி கோபுரத்தின் மீது நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணியானது நடைபெற்று வருகின்றது” என்று கூறியுள்ளார்.