Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தாயுடன் தகராறு செய்த மகன்….. தந்தையின் கொடூர செயல்…. கோவையில் பரபரப்பு…!!

தந்தை மகனை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொப்பம்பட்டி பூங்கா நகரில் கூலி தொழிலாளியான முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமேரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஆட்டோ ஓட்டுநரான ஷாஜகான் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஷாஜகான் அடிக்கடி தனது பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த ஷாஜகான் தூங்கிக்கொண்டிருந்த தனது தாயை எழுப்பி குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு என்னிடம் பணம் இல்லை என உமேரா கூறியதால் ஷாஜகான் தகராறு செய்துள்ளார்.

இதனை பார்த்த முகமது தனது மகனை கண்டித்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த முகமது தனது வீட்டில் இருந்த கத்தியால் ஷாஜகானை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த ஷாஜகான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகமதை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |