இரண்டாம் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள டி.ஐ.ஜி. அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள போலீசார் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை போலீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 213 பேருக்கு பயிற்சி பகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த பயிற்சியில் திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், கரூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர்.
இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பயிற்சியை தொடங்கி வைத்தார். அதன்பின்னர் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு அமலதாஸ், சட்ட போதகரான இன்ஸ்பெக்டர் அகிலாண்டேஸ்வரி, இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, உதவி சட்ட போதகர்கள், உதவி கவாத்து போதகர்கள் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராணி, ரவிச்சந்திரன், செந்தமிழன், புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பயிற்சிகள் அளிக்க தொடங்கினர். இந்த பயிற்சியானது 7 மாதம் நடைபெறுவதாகும். அதில் ஒரு மாதம் செயல்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளனர். மேலும் இந்த பயிற்சி அக்டோபர் மாதம் 13- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.