Categories
மாநில செய்திகள்

இனி இந்த ரக நெல் சாகுபடி கொள்முதல் இல்லை… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

நேரடி கொள்முதல் நிலையங்களில் டிகேஎம் 9 ரக நெல் கொள்முதலை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நேரடி கொள்முதல் நிலையங்களில் டிகேஎம் 9 ரக நெல் கொள்முதலை கைவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நெல் கொள்முதலில் மாற்றம் செய்யப்பட உள்ளது பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கூறப்பட்டுள்ளதாவது,தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் டிகேஎம் 9 ரக ரக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வகை  நெல்லினை அரவை  செய்து தரப்படும் அரிசி சிவப்பு நிறத்தில் சற்று பருமனாக இருப்பதால் இவ்வகை அரசியினை  பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் வாங்க விருப்பம் காட்டுவதில்லை.

இந்த ரக நெல் சாகுபடி செய்யப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களும் கூட இந்த அரிசியினை பயன்படுத்த விரும்புவது இல்லை. இந்நிலையில்  டிகேஎம்9  ரக அரிசி பொது வினியோகத் திட்டத்தின் கீழ் பொது மக்கள் விரும்பாத நிலையில் விநியோகிப்பதை  தவிர்க்கலாம் என அரசு முடிவு செய்து எதிர்வரும் கே எம் எஸ் 2022 – 2023 பருவத்தில் இருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக டிகேஎம்9 ரக நெல்லில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதை கைவிட வேண்டும் என அரசு ஆணையிட்டுள்ளது. மேலும் தற்போது சந்தையில் புழக்கத்திலிருக்கும் பிர சன்ன ரக நெல் வகைகளை சாகுபட செய்து விவசாயிகள் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |