Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கடைக்கு சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே தேரேகால்புதூர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வம் பொருட்கள் வாங்குவதற்காக கடை வீதிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவரின்  மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே செல்வம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன்பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நாகர்கோவில் கோட்டார் போக்குவரத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |