Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மது போதையில் வந்த நண்பர்கள்…. மாணவருக்கு நேர்ந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

சட்டக்கல்லூரி மாணவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ராஜாமங்கலம் அருகே வடக்குகோணம் பகுதியில் ஸ்டான்லி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சட்ட கல்லூரியில் படிக்கும் ஆண்டனி சுரேஷ் பிரபு என்ற மகன் இருக்கிறார். இவரும் மிசல், ஸ்ரீநாத் இவருடைய தம்பி ஆகிய 4 பேரும் நண்பர்கள் ஆவார். இவர்கள் 4 பேரும் சேர்ந்து அடிக்கடி மது குடிப்பது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆண்டனி சுரேஷ் வீட்டிற்கு இவருடைய நண்பர்கள் 3 பேரும் வந்துள்ளனர். இவர்கள் மது குடித்துவிட்டு ஆண்டனி சுரேஷிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். ஆனால் ஆண்டனி சுரேஷ் பணம் தன்னிடம் இல்லை என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் பீர் பாட்டிலால் ஆண்டனி சுரேஷின் தலையில் பலமாக அடித்தனர். அதன்பிறகு வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஆண்டனி சுரேஷை  மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராஜமங்கலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |