Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“கடனை திருப்பி செலுத்த முடியவில்லை” ஓட்டுநர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

டெம்போ ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள்சந்தை அருகே தச்சன்பரம்பு பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டெம்போ ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு டெம்போ ஓட்டுவதில் சரியான லாபம் கிடைக்காததால் அவரால் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. இதன் காரணமாக மிகுந்த மனவேதனையில் இருந்த சுபாஷ் அடிக்கடி மது அருந்தியுள்ளார்.

இந்நிலையில் சுபாஷ் தனது வீட்டின் அருகே இருக்கும் ஒரு தோட்டத்தில் விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சுபாஷின் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெய்யூரில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுபாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இரணியல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |