Categories
விழாக்கள்

காப்பு கட்டுவதில் இவ்வளவு நன்மையா… இனியாவது கட்டலாமே…!!

போகி பண்டிகையில் காப்பு கட்டுவதின் அவசியம்…..

போகி பண்டிகை என்றால் வீட்டில் உள்ள பழையனவற்றை தீயிட்டு கொளுத்துவது என்பது மட்டுமே இன்றைய தலைமுறையினர் தெரிந்து வைத்திருக்கின்றனர்.

உண்மையில் இப்பண்டிகை கொண்டாடுவதின் முக்கிய நோக்கம், பருவநிலை மாற்றங்களின் அடிப்படையில் ஒரு வருடத்தை தமிழன் இரண்டாக பிரித்தான். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தென்கிழக்கு பகுதியில் சூரியன் உதிக்கிறது, அதன்பிறகு வடகிழக்குப் பகுதியில் சூரியன் உதிக்க தொடங்குகிறது, இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களால் நோய் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவே தூய்மையை கொண்டாடும் நாளாக போகிப்பண்டிகை கடைபிடிக்கப்படுகிறது.

ஆனால் இந்த தலைமுறையினர் போகி பண்டிகை என்றால் வெறுமனே ஏதோ ஒன்றை கொளுத்த வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.

தங்கள் இருப்பிடத்தை சுத்தம் செய்வது மட்டுமல்லாது மக்கள் தங்கள் அகத்தையும் சுத்தம் செய்ய அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே போகிப் பண்டிகையின் பொது வீட்டில் காப்பு கட்ட படுகிறது. கிருமி நாசினியாக இருக்கக்கூடிய வேப்பிலை, ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய ஆவாரை, சிறுநீரகத்தை சுத்தபடுத்த கூடியது என்ற சிறு பிள்ளை இந்த மூன்றையும் சேர்த்து வீட்டு முற்றத்தில் கட்டுவதே காப்பு கட்டுவது.

அகத்தை சுத்தபடுத்தும் இந்த மூலிகைகளின் குணங்களை மக்கள் அறிந்து கொள்ளவே அதை வீட்டின் முற்றத்தில் கட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே காப்பு கட்டி நன்மைகளை பெற்றிடுங்கள்.

Categories

Tech |