உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகளுக்கு தேவையான எரிசக்தி மற்றும் தண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் தாக்குதலை தொடங்கியது. இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்த போது ஒரே நாளில் அந்நாட்டை வீழ்த்திவிடலாம் என்று எதிர்பார்த்திருந்தது. ஆனால் உக்ரைன் தலைநகரங்களை கைப்பற்ற முடியாமல் இரண்டு வாரங்களுக்கு மேல் ரஷ்ய படைகள் திணறி வருகின்றனர். இதற்கு காரணம் ரஷ்ய ராணுவம் மற்றும் விமான படைகளுக்கு இடையே பொதுவான ஒத்துழைப்பு இல்லாதது தான் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் பலர் இணையதளங்களில் உக்ரைன் குறித்து ரஷ்யா தப்புக்கணக்கு போட்டு விட்டதாகவும் “ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டார் புதின்” என்றும் விமர்சித்து வருகின்றனர். மேலும் நெப்போலியன், ஹிட்லர் ஆகியோருக்கு நேர்ந்த அதே கதி தான் புதினுக்கும் ஏற்பட்டு உள்ளதாக கூறி வருகின்றனர்.
இதற்கு காரணம் ‘ரஸ்புதிட்சா’ எனப்படும் பருவநிலை உக்ரைனை காக்கும் அரணாக தற்போது விளங்கி வருகிறது. இது ஒருவகை வானிலை சீசன். இந்த கால கட்டத்தில் அதிக மழை மற்றும் பனி ஏற்பட்டும். இதனால் சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கு கடினமானதாக மாறிவிடுகிறது.
தற்போது இந்த நிலையினால் பீரங்கிகள் மற்றும் ரஷ்யாவின் ராணுவ படைகள் முன்னேற முடியாமல் திணறி வருவதாகவும் சில இடங்களில் பீரங்கிகளை விட்டு ராணுவ வீரர்கள் நடந்தே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரஷ்ய படைகளுக்கு அங்கு ஏற்பட்டுள்ள நிலை புதிய மற்றும் மிகப் பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது. மேலும் உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகளுக்கு தேவையான எரிசக்தி மற்றும் தண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது தொடங்கியிருக்கும் இந்த வானிலை இன்னும் 2 அல்லது 3 வாரங்களுக்கு தொடரும் என்பதால் தற்போது சுதாரித்துக் கொண்டு புதின் தனது படைகளை பின்வாங்குவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் உக்ரைனில் இருந்து வெளியேறிய இந்திய மாணவர்களும், அங்கு நிலவிய மோசமான நிலை குறித்து தெரிவித்தனர்.