Categories
சினிமா

பிரபல நடிகருக்காக தனது உயிரை விட்ட ரசிகர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!!

“ராதே ஷ்யாம்” படத்தின் விமர்சனம் காரணமாக பிரபாஸ் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திராவின் கர்னூலைச் சேர்ந்த முக்யாலா ரவி தேஜா(24) என்பவர் படம் பார்த்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது பலரும் படம் நன்றாக இல்லை என கூறியதால் அவர் தாயிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.

இதையடுத்த வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |