கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் அருகே பரவத்தூர் கிராமத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் 1 மகள் இருக்கின்றனர். இந்நிலையில் மாணிக்கத்திருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மாணிக்கம் வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் மாணிக்கத்தை மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சோளிங்கர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.