அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளின் இன்று காலை 9 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.சுமார் 15 நிமிடங்கள் இந்த நிலநடுக்கம் நீடித்தது. பல வீடுகளில் இதனால் அதிர்வு உணரப்பட்டுள்ளது. அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவானதாக நில அதிர்வு காண தேசிய மையம் தெரிவித்துள்ளது.
அந்தமானின் டிட்லிபூர் நகரின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தின் தாக்கம் சுமார் பத்து கிலோமீட்டர் வரை உணரப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் அப்பகுதியில் இதனால் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கம் 25 கிமீ வரை உணரப்பட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. நிக்கோபார் கடல்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.