Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நான்கு வருட காதல்…. ஏமாற்றமடைந்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை….!!

திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை ஏமாற்றியவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்டார்மடம் பகுதியில் சண்முகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டுராஜ் என்ற மகன் உள்ளார். இவரும் உறவினர் பெண் ஒருவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். கட்ந்த 2020-ஆம் ஆண்டு பட்டுராஜ் தனது பெற்றோரிடம் திருமணத்திற்கு சம்மதம் கேட்பதற்காக அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது பட்டுராஜின் பெற்றோர் மூத்த மகனின் திருமணம் முடிந்த பிறகு உங்களுடைய திருமணத்தை நடத்தி வைப்பதாக  உறுதியளித்தனர். இந்நிலையில் பட்டுராஜ் பெண்ணிடம் திருமண ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். இதற்கிடையே கடந்த மாதம் அண்ணன் திருமணம் நடந்துள்ளது. இதனை அறிந்த அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பட்டுராஜிடம் கூறியுள்ளார்.

ஆனால் பட்டுராஜ் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இது குறித்து அந்த பெண் திசையன்விளை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது நடந்த விசாரணையில் பட்டுராஜ் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக எழுதி கொடுத்துள்ளார். கடந்த மாதம் 27-ஆம் தேதி அந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது அவருடைய தந்தை சண்முகநாதன் மற்றும் பட்டுராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை அவமரியாதை செய்து துன்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து அந்த பெண் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் பட்டுராஜ் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |