கன்யாதான் பாலிசி தொடர்பான முக்கியமான தகவலை எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சில நாட்களாகவே எல்ஐசி நிறுவனத்தின் ஒரு பாலிசி தொடர்பான செய்தி வைரலாக பரவி வருகிறது. இந்த பாலிசியில் நாள் ஒன்றுக்கு 120 ரூபாய் டெபாசிட் செய்தால் 25 ஆண்டுகளில் 27லட்சம் ரூபாய் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த பாலிசியில் பெயர் கன்யாதான். பெண் குழந்தை உள்ள பெற்றோர்கள் இந்த பாலிசியை எடுக்கலாம். அந்த குழந்தை பிறந்தவுடன் அதன் திருமணச் செலவுகளுக்கு இந்த பாலிசி மிகவும் உதவும் என்பது போன்ற செய்திகள் அதிகமாக வெளியிடப்பட்டு வருகிறது. உண்மையில் அப்படி ஒரு பாலிசி இல்லை என்று LIC நிறுவனம் கூறியுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கன்யாதான் பாலிசி என்ற பெயருடன் ஊடகங்களில் செய்திகள் பரவிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அப்படி ஒரு பாலிசியை எல்ஐசியில் இல்லை எல்ஐசி தொடர்பான விவரங்களுக்கு https://licindia.in/ இந்த வெப்சைட்டில் சென்று பார்க்கவும் என கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் தளங்களில் செய்தி வருவது மட்டுமல்லாமல் எல்ஐசி ஏஜென்ட் என்ற பெயரிலும் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு இந்த பாலிசியில் சேரும்படி கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இதற்கு எல்ஐசி பொறுப்பேற்காது எனக்கூறப்பட்டுள்ளது. எல்ஐசி ஐபிஓ வரவிருக்கும் நிலையில் எல்ஐசி பாலிசி தொடர்பான செய்திகள் சமீப நாட்களாக நிறைய வந்துகொண்டிருக்கிறது.
அதுவும் கன்யா தான் தொடர்பான சில செய்திகள் அதிகமாக பரவுகிறது. இந்த பாலிசி மட்டுமல்ல எந்த ஒரு பாலிசியாக இருந்தாலும் அதுபற்றி எல்ஐசி அதிகாரப்பூர்வ செய்தி சென்று பார்த்து பாலிசி எடுத்தால் நல்லது எனக் கூறப்பட்டுள்ளது.