Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடிக்கடி நடத்த திருட்டு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. அதிரடி காட்டிய தனிப்படையினர்….!!

வெவ்வேறு பகுதியில் 2 பெண்களிடம் தங்க சங்கிலியை திருடிய வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பி.டி.ஆர். காலனியில் வசித்து வரும் சந்திரா(70) என்பவர் கடந்த மாதம் 22-ம் தேதி அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் 2 பேர் சந்திரா அணிந்திருந்த 4 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இதேபோல் பெரியகுளம் வரதராஜ நகரை சேர்ந்த செல்வி (32) என்பவரிடமும் மர்ம நபர்கள் தண்ணீர் கேட்பது போல் நடித்து அவரிடமிருந்து 2 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.

இந்த இரு சம்பவங்கள் குறித்து ஜெயமங்கலம் மற்றும் உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி உத்தரவின்படி குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். அதன்படி சம்பவத்தன்று போலீசார் உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த லோகநாதன் (28), மதுரையை சேர்ந்த பாண்டியன் (28) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 6 பவுன் தங்க சங்கலி மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |