Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஹீட்டரை பயன்படுத்திய புதுப்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் மோகன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி பேபிஷாலினி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பேபி ஷாலினி ஹீட்டர் மூலமாக வெந்நீர் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பேபிசாலினி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பேபி ஷாலினிக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆகிறது என்பதால் இந்த வழக்கை ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.

Categories

Tech |