Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரால்… கொரோனா பரவல் அதிகரிக்கும்…. உலக சுகாதார மையம் தகவல்…!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார மையம் எச்சரித்திருக்கிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 17-ஆம் நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பல்வேறு நகர்களை ஆக்கிரமித்து தலைநகரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. எனவே, உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன.

இந்நிலையில், உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுப்பது கொரோனா பரவலை அதிகரிக்கச் செய்யும் என்று உலக சுகாதார மையம் எச்சரித்திருக்கிறது. இது தொடர்பில் உலக சுகாதார மையம் தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் நாட்டில் நடக்கும் போரால் மக்கள் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

மேலும், உக்ரைன் மற்றும் ஒரு சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வது குறைந்திருக்கிறது. எனவே, தடுப்பூசிகள் எடுத்துக் கொள்ளாதது மற்றும் சிகிச்சை நிறுத்தப்படுவதால் கொரோனா பரவல் அதிகரிக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது.

Categories

Tech |