Categories
மாநில செய்திகள்

9-12 ஆம் வகுப்பு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. வரும் 14 ம் தேதி முதல்…. வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பிப் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான தேர்வுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. அந்த வகையில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதையடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 5 ம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதன்பின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6-மே 30ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அடுத்ததாக 1 -5 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13ம் தேதி வரை தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் 9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் இணையதளம் மூலமாக திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருடந்தோறும் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த அடிப்படையில் நடப்பாண்டு 9-12ம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி, இசை, கலை உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இப்பயிற்சிக்கான காணொலி செயல்பாடுகள் முதலியன உள்ளடக்கப்பட்டு 12 கட்டகங்கள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக உருவாக்கப்பட்டு உள்ளது. அதாவது இணையத்தளத்தில் திறன்மேம்பாட்டு பயிற்சி எனும் தலைப்பின் கீழ் ஆசிரியர்கள் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இப்பயிற்சியானது மார்ச் 14ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.

Categories

Tech |