Categories
மாநில செய்திகள்

LKG முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை…. பள்ளிக்கல்வித்துறை சொன்ன குட் நியூஸ்…!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. மாணவர்களும் வீட்டில் இருந்தபடியே பாடங்களை படித்து வந்தனர். இதற்கிடையில் ஊரடங்கு கட்டுப்பாடு நடவடிக்கைகளின் காரணமாக பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்ததால் மீண்டும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டது. கொரோனா காலத்தில் பல்வேறு சூழ்நிலைகளால் ஒருசில மாணவர்கள் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில் கொரோனா காலத்தில் பள்ளிகளில் இருந்து விலகிய மாணவர்களை கருத்தில் கொண்டுஆண்டு இறுதித்தேர்வு நடக்கும் வரை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.  எல்கேஜி முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களை பள்ளியில் சேர்க்க அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. மேலும் இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |