Categories
மாநில செய்திகள்

“மாதவிடாய் கேள்வி” இதுதான் காரணம்…. பள்ளிக்கல்வித்துறை கொடுத்த விளக்கம்…!!!!

பாலியல் பிரச்சினைகள் அதிகரித்துள்ள காலகட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் ஆரோக்கியமற்ற செயல்பாடுகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றது.  புதிதாக  ‘எமிஸ்’ என்ற கல்வி மேலாண்மை செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த  செயல்பாட்டால் ஆசிரியர்களும், மாவட்ட அதிகாரிகளும் இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர். தினமும் பாடம் நடத்தும்  நேரத்தை விட எமிஸ் செயலி தளத்தை செயல்பட வைக்க  ஆசிரியர்கள் பல மணி நேரம் போராட வேண்டி  உள்ளது.  இதன் ஒரு கட்டமாக மாணவ மாணவியரிடம் வகைகளில் 64 கேள்விகளுக்கு தினமும் பதில் பெற்று பதிவு செய்யுமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கேள்விகளில் சிலவற்றுக்கு மாதம் ஒரு முறையும் சிலவற்றுக்கு தினமும் பதில் பெற வேண்டும்.  அதில் ஒன்று மாணவியரிடம் மாதவிடாய் ஒழுங்காக வருகிறதா? மாதவிடாய் போது  உதிரப்போக்கு அதிகமாக உள்ளதா என்ற கேள்விகளுக்கு பதில் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கேள்விகளால் மாணவிகள்  மற்றும் ஆசிரியர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, பள்ளி மாணவ மாணவியரிடையே மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் உடல் நலன் அக்கறையின் காரணமாக மாதவிடாய் பற்றி கேள்வி கேட்பதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |