Categories
மாநில செய்திகள்

மீனவர்களுக்கு 14ஆம் தேதி வரை சிறை…. இலங்கை நீதிமன்றம் உத்தரவு..!!!!

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி மீன் பிடிப்பதற்காக  மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இந்நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 16 மீனவர்களையும் 3 விசைப்படகுகளையும்  கைது செய்து ஊர்க் காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிப்ரவரி 22ஆம் தேதி யாழ்பாணம் சிறையில் அடைக்க  இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதனையடுத்து ராமேஸ்வரம் மீனவர்களை வரும் 14ஆம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 8  தமிழக மீனவர்களை கைது செய்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |