Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறால்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத பெற்றோர்….!!

குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் லட்சுமிபுரம் ப[ஆகுதியில் கோகுல்ராஜ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் செல்போன் கடை ஒன்றை நடனத்தி வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சனையால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கோகுல்ராஜ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சென்ற தென்கரை போலீசார் வாலிபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |