Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

11 மீனவர்கள் விடுதலை…. உரிமையாளர்கள் ஆஜராக வேண்டும்…. நீதிபதி அதிரடி உத்தரவு….!!

கடந்த மாதம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மாதம் 7 ஆம் தேதி 11 மீனவர்கள் 3 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் அவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 1 மாதமாக சிறையில் இருந்து அவதிப்பட்ட 11 மீனவர்களையும் அதிகாரிகள் ஊர்காவல்த்துரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளார்.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி கைது செய்யப்பட்ட 11 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 3 விசைப்படகுகளின் உரிமையாளர்களும் வருகின்றன 27ஆம் தேதி ஆர்.சி. புத்தகத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |