Categories
தேசிய செய்திகள்

உ.பி தேர்தல்…. 60,000 வாக்குகள் வித்தியாசம்…. அகிலேஷ் யாதவ் அபார வெற்றி….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்தது. தற்போது அந்த வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த 5 மாநிலங்களில், 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகின்றது. ஒரு மாநிலத்தில் மட்டும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. மேலும் உத்திரபிரதேச மாநிலத்தில் கர்ஹார் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜக முன்னிலை வகித்து வரும் நிலையில் சமாஜ்வாதி கட்சியும் அதற்கு நிகராக போட்டி போட்டு வருகின்றது. இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவ் கர்ஹார் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |