Categories
தேசிய செய்திகள்

ஆரம்பம் முதலே கெத்து காட்டும் பாஜக….. உ.பியில் தொடர்ந்து முன்னிலை….!!!!

உத்திரப் பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 5 மாநில முடிவுகள் ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தல், 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். இதனால் 5 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்தது. தற்போது அந்த வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதையடுத்து தற்போதைய நிலவரப்படி, உத்தரபிரதேச மாநிலத்தை பொறுத்தவரை பாஜக கட்சி 31 இடங்களை பிடித்து முன்னிலை வகிக்கிறது. அதனைத் தொடர்ந்து சமாஜ்வாதி கட்சி 14 இடங்களைப் பிடித்துள்ளது. பகுஜன் சமாஜ்வாதி 1 தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. தற்போதுவரை காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |