Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. மெட்ரோ ரயில் நிலையங்களில் இனி… பயணிகளுக்காக புதிய வசதி…!!!!

சென்னை மாநகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக பஸ் மற்றும் ஆட்டோ சேவைகள்  தொடங்கப்பட்டுள்ளன. பயணிகள் தங்கள் ஸ்மார்ட் கைப்பேசிகளில் ஒரு பட்டன் கிளிக் செய்வதன் மூலமாக இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடிகிறது.

மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து தொலைதூரத்திற்கு செல்ல வேண்டிய பயணிகள் வசதிக்காக ரேபிடோ பைக் மற்றும் உபர் ஆட்டோ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. உபர் ஆட்டோ கிண்டி, ஆலந்தூர், எழும்பூர், கோயம்பேடு ரயில் நிலையங்களிலும், ரேபிடா விமான நிலையம், ஆலந்தூர்,கிண்டி , உள்ளிட்ட விமான நிலையங்களிலும் இயக்கப்படும். மேலும் உபர் செயலியில்”UBERCMRL”  என்ற குறியீட்டைப் பயன்படுத்தி 20 சதவீதம் கட்டண சலுகை,ரேபிடா பைக் செயலியை  பயன்படுத்தி 30 சதவீத கட்டண சலுகை பெறலாம்.

Categories

Tech |