கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள பாப்பம்பாடி கிராமத்தில் வேடப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வேடப்பன் மது வாங்கி அருந்திவிட்டு நடந்து சென்றுள்ளார். அப்போது வேடப்பன் அங்குள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் இது குறித்து ஓமலூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் வேடப்பனின் உடலை கிணற்றிலிருந்து மீட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வேடப்பனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.