Categories
தேனி மாவட்ட செய்திகள்

தண்ணீர் குடிக்க வந்ததால் விபரீதம்…. மானுக்கு ஏற்பட்ட கதி…. வனத்துறையினர் செய்த செயல்….!!

தண்ணீர் குடிக்க வந்த 2 வயது கடமான் கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் வனத்துறையினர் பத்திரமாக புதைத்தனர்.

தேனி மாவட்டம் கண்டமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட மலைப்பகுதியில் யானை, கரடி, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் அதிகம் வசித்து வருகின்றன. இந்நிலையில் அய்யனார்புரம் அருகேயுள்ள தனியார் கிணறு ஒன்றில் கடமான் ஒன்று உயிரிழந்து கிடந்துள்ளது.

இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சென்ற கண்டமனூர் வனத்துறையினர் கிணற்றில் விழுந்த 2 வயதான ஆண் கடமானை மீட்டனர். இதனையடுத்து கால்நடை மருத்துவர்களின் குழுவினரின் உதவியுடன் கடமானை பரிசோதித்து வனப்பகுதியிலேயே பத்திரமாக புதைத்தனர்.

Categories

Tech |