தமிழிலுள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக கண்மணி பணியாற்றி இருக்கிறார். இவர் மாலை முரசு, ஜெயா நியூஸ், நியூஸ் 18, காவேரி நியூஸ் ஆகிய பல்வேறு தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்துள்ளார். மாடலிங் துறையிலிருந்து வந்த கண்மணி சேகர் சன் டிவியில் தனது தனித்துவமான பேச்சாற்றலால் தொடர்ந்து செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் சன் நியூஸ் லைவ்விலும் பணியாற்றி உள்ளார்.
இவருடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக இருப்பதால் இவரது செய்திகளுக்கு பெரும்பாலான ரசிகர்கள் இருக்கின்றனர். கண்மணி சேகர் பல்வேறு பிரபலங்களை பேட்டி எடுத்து உள்ளார். சமூக வலைத்தளங்களில் மிக சுறுசுறுப்பாக உள்ள இவர் அவ்வப்போது எடுக்கும் போட்டோக்களை பதிவிட்டு வருவார். அந்த போட்டோக்கள் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும். இந்தநிலையில் கண்மணி சேகர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இதயத்தை திருடாதே எனும் சீரியலில் சிவா கதாபாத்திரத்தில் நடித்துவரும் நவீனை காதலித்து வருகிறார்.
இதயத்தை திருடாதே தொடரின் வாயிலாக நவீனுக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் இருக்கின்றனர். இதில் நவீன் மலையாளத்தில் மணிரத்னம் என்ற படத்தின் வாயிலாக முதன் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். அதுமட்டுமின்றி தமிழில் மசாலா படம், பூலோகம், மாயவன், மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது நவீன் மற்றும் கண்மணி இருவரும் காதலித்து வருவது அவர்களின் ரசிகர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது திருமணம் இந்த வருடம் இறுதிக்குள் நடைபெற அதிகவாய்ப்பு இருக்கிறது.