தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட தொழிலாளி விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள 3-வார்டில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
இதனால் விரக்தியடைந்த ராஜா வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக ராஜாவை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே ராஜா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து கூடலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.