Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“பணத்தை திரும்ப தா” நகைக்கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் விசாரணை…!!

நகை கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகைகடை வைத்து நடத்தி வருகிறார். இவர் சுகுமார் என்பவரிடம் ரூபாய் 5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதில் 2 லட்சத்தை மட்டும் திரும்ப செலுத்தியுள்ளார். இந்நிலையில் சுகுமார் பாக்கி பணத்தை தருமாறு சதீஷ்குமாரிடம்‌ கூறியுள்ளார். அதற்கு சதீஷ்குமார் பணம் வந்தவுடன் திருப்பி தருவதாக கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சுகுமார் நகைகடைக்குள் நுழைந்து சதீஷ்குமார் மற்றும் அவரது மகன் உள்பட 3 பேரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சதீஷ்குமார் திண்டிவனம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுகுமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |