தமிழகத்தில் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பவர்களிடமிருந்து அந்த நிலங்களை மீட்க இந்து சமய அறநிலையத் துறையினர் சார்பில் நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இந்த பணிகளை சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு நேரில் சென்று அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இதுவரை தமிழக கோவில்களுக்கு சொந்தமான 31 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை தொடர்ந்து மொத்தம் 150 நில அளவையாளர்கள் மூலம் இந்த பணிகளை 56 ரோவர் கருவிகளைக் கொண்டு நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சேகர்பாபு பல்வேறு கோவில்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.