Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இணையத்தில் இருந்த போலி எண்…. பணத்தை பறிகொடுத்த நபர்….. 57 ஆயிரம் மோசடி….!!

தனியார் நிறுவன சேவை நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி 57 ஆயிரம் ரூபாயை ஏமாற்றிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் வசித்து வரும் முகமது என்பவர் தான் வைத்திருக்கும் தனியார் நிறுவன கிரெடிட் கார்டின் பில் தேதி தவணை தெரியாத நிலையில், இதுகுறித்து இணையத்தில் தேடியுள்ளார். அப்போது அதில் குறிப்பிட்டிருந்த தனியார் நிறுவனத்தின் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது மறுமுனையில் பேசிய மர்மநபர் முகமதின் கிரெடிட் கார்டு எண் உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளார்.

இதனையடுத்து முகமதும் அதனை நம்பி அவர் கேட்ட அனைத்து விவரங்களையும் கூறியுள்ளார். இதனைதொடர்ந்து அழைப்பை துண்டித்த சிறு வினாடிகளிலேயே அவர் வங்கி கணக்கில் இருந்து 57,888 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முகமது உடனடியக சைபர் கிரைம் போலீசுக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |