Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்திபெற்ற கோவில் தேர்…. 25 ஆண்டுகளுக்கு பிறகு மராமத்து பணிகள்…. 75% நிறைவு….!!

ரெங்கநாதர் சுவாமி கோவில் தேர் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இதுவரை 75% பணிகள் முடிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான ரெங்கநாதர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான தேர் ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த தேர் சுமார் 25 வருடங்களாக மராமத்து பணிகள் எதுவும் நடைபெறாமல் இருந்ததாக கூறப்படுகிறது.  எனவே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுமார் 56 லட்சம் ரூபாய் செலவில் தேரை மராமத்து செய்து புதுப்பிக்க முடிவு செய்துள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த பணிகள் மகாபலிபுரம் தண்டபாணி ஸ்தபதி தலைமையில் 15 பேர் தேரை புதுபிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது வரை 75% பணிகள் முடிந்துள்ளதாகவும், அடுத்த ஒரு மாதத்திற்குள் பணிகள் முழுமையாக நிறைவடையும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |