மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்தியதாகக் கூறப்படும் நிர்மலா தேவி விவகாரத்தில், அவரது வழக்குக்கு ஆதரவாக வாதாடி வந்த வழக்கறிஞர் விலகுவதாக தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் நிர்மலாதேவி வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ குற்றம்சாட்டப்பட்ட நிர்மலாதேவி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை, கலைச்செல்வன், தங்கப்பாண்டியன் உள்ளிட்டவர்களுக்காகத்தான் கல்லூரி பெண்களை தவறான பாதைக்கு வழிநடத்தியதாக தன்னிடம் நிர்மலாதேவி தெரிவித்தார்’ எனக் கூறினார்.