Categories
உலக செய்திகள்

அப்படி போடு….! “ரஷ்யாவில் ‘போலி செய்திகளுக்கு’ தடை”…. பிரபல செயலி முடக்கம்”….!!!

ரஷ்யாவில் தனது ஒளிபரப்பை நிறுத்தி உள்ளது டிக் டோக் செயலி நிறுவனம் . 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெள்ளிக்கிழமை அன்று 15 ஆண்டுகள் வரை ‘போலி செய்திகளுக்கு’ சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தை கையெழுத்திட்டுள்ளார். இந்த சட்டத்தின் கீழ் ராணுவத்தை பற்றிய தவறான செய்திகளை வெளியிடுவதற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இதனைத் தொடர்ந்து பொருளாதார தடைகளை ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கும் நபர்களுக்கும் அபராதம் போடப்படும். மேலும் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் போலியான செய்திகளுக்கு நீதிமன்றங்கள் தக்க தண்டனை வழங்கும்.

இந்த நிலையில் டிக் டோக் செயலி நிறுவனம் ரஷ்யாவின் ‘போலி செய்தி’ சட்டத்தினால் நேரடி ஒளிபரப்பை நிறுத்தியதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிக் டாக் செய்தி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “மக்கள் போரின் போது தனிமைபடுத்தலையும், பெரும் சோகத்தையும் எதிர்கொள்ளும் வகையில் மனித தொடர்பு வழங்கக் கூடிய படைப்பாற்றல், நிவாரணம் மற்றும் பொழுது போக்கிற்கான ஒரு பங்காக இருக்க விரும்புகிறோம். மேலும் டிக் டாக் செயலியின் பயனர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பே முக்கியம்” என்று கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பிபிசி செய்தி நிறுவனம் ரஷ்யாவின் “போலி செய்தி” சட்டத்தை நிறைவேற்றிய பிறகு தனது பணியையும் நிறுத்துவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |