Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மனைவி இறந்த துக்கம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மனைவி இறந்ததால் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புலிபாறைப்பட்டி கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வைரம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வைரம் உடல்நிலை குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கர் தனது  வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சங்கரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சங்கரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |