தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று (04.03.2022) நடைபெற்றது. இந்த மறைமுக தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி,
மாநகராட்சி மேயர் பதவி (21) :-
திமுக – 20
காங்கிரஸ் – 1
துணை மேயர் பதவி :-
திமுக – 15
காங்கிரஸ் – 2
மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக – தலா 1
நகராட்சி தலைவர் பதவி (138) :-
திமுக – 125
அதிமுக – 2
காங்கிரஸ், மதிமுக, விசிக – தலா 1
சுயேச்சை – 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.