மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆட்கொண்டார்குளம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு சண்முகத்தை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் முருகன் சங்கரன்கோவில்-புளியங்குடி மோட்டார் சைக்கிளில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது பணியாளர்களை தனியார் நூற்பாலைக்கு ஏற்றி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் வேன் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த முருகனை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலறிந்த சங்கரன்கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கால்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.