Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகனுடன் சென்ற தந்தை…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர் ….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து முதியவர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எம்.எஸ். அக்ரஹாரம் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பாலசுப்பிரமணியம் தனது மகனான ஹரிஷ்குமாருடன் இளையான்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த பாலசுப்பிரமணியனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாலசுப்பிரமணியை  பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |