ரஷ்ய படைகள் சபோரிஷியா அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தி வருவதாக வெளியுறவு அமைச்சர் குலேபா தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது ரஷ்ய படைகள் உக்ரைனில் உள்ள எனர்ஹோடர் பகுதியை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் எனர்ஹோடர் பகுதியில் தான் உக்ரைனின் மிகப்பெரிய சபோரிஷியா அணுமின் நிலையம் உள்ளது. இந்த அணுமின் நிலையத்தில் தான் உக்ரைனின் 15 உலைகளில் 6 உலைகள் உள்ளன.
இதனை தொடர்ந்து ரஷ்யா ஏற்கனவே 1986-ம் ஆண்டு உலகின் மிகப் மோசமான அணுசக்தி பேரழிவு நடந்த செர்னோபில் அணுமின் நிலையத்தை கைப்பற்றியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து வெளியுறவு அமைச்சர் குலேபா கூறியதாவது. “ரஷ்ய படைகள் சபோரிஷியா அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அணுமின் நிலையம் தீப்பிடித்து விட்டது . இதனைத் தொடர்ந்து ரஷ்ய படைகள் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தை நான்கு புறமும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சபோரிஷியா அணுமின் நிலையம் வெடித்தால் அதன் பாதிப்பு செர்னோபில் அணு உலை பாதிப்பை விட 10 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.