தந்தை-மகனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள சுக்காங்கால்பட்டியை சேர்ந்த அரவிந்த்(33) என்பவர் தற்போது சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 பிள்ளைகள் உள்ள நிலையில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று அரவிந்தனின் மாமனார் சிவாஜி மற்றும் அவரது மகன் ஆகியோர் அரவிந்த் வீட்டிற்கு சென்றனர்.
அப்போது வீட்டில் இருந்த அரவிந்த் மற்றும் அவரது தந்தை ராஜாவை ஆபாசமாக பேசியதோடு மட்டுமல்லாமல் அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதில் பலத்தகாயமடைந்த தந்தை-மகனை அக்கம்பக்கத்தினர் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து கூடலூர் வடக்கு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சிவாஜி மற்றும் ஸ்டாலினை வலைவீசி தேடி வருகின்றனர்.