Categories
மாநில செய்திகள்

#BREAKING: மாநகராட்சி துணை மேயர் பதவி…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது.

இதையடுத்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் 04/03/2022 நாளை நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த பதவிகளில் சிலவற்றை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி உள்ளதாக திமுக அறிவித்துள்ளது. அதன்படி மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகளுக்காக திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு திமுக சார்பில் மு.மகேஷ் குமார் என்பவர் போட்டியிடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |