கடலோர மாவட்டங்களில் பலத்த சூறாவளி காற்று வீசப்படும் நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல அதிகாரிகள் தடை வித்துள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு பலத்த காற்று மற்றும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கடலோர மாவட்டங்களில் பலத்த சூறாவளி காற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கு மீன்துறை அதிகாரிகள் தடை வித்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் உள்ள 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுக பகுதிலேயே நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ராமேஸ்வரத்தில் பலத்த சூறாவளி காற்று வீசிய நிலையில் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்ட விசைப்படகின் கயிறு அறுந்து கடலில் மூழ்கியது. இன்னியாயில் கடலில் மூழ்கிய படகை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.