Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தம்பதியினரிடையே ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குடும்பத்தகராறில் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள காந்தி வீதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆந்தகுடி திருமஞ்சனம் கீழத்தெருவில் வசித்து வந்த நித்யா என்பவரை கடந்த 2 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பின் இருவரும் நித்யாவின் தந்தை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் தம்பதியினருக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஐயப்பன் வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஐயப்பனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |