Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுவன்…. குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கழிவுநீர் தொட்டியில் சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை பகுதியில் இருக்கும் நடுவநேரி அருகில் காட்டூர் கிராமத்தில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 9 வயதுடைய நவீன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அந்தப் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் வெளியே விளையாட சென்ற நவீன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நவீனின் தந்தை அவரை பல இடங்களில் தேடியுள்ளார்.

அப்போது அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு கழிவுநீர் தொட்டியில் நவீன் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நவீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விளையாடும்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்திருக்கலாம் என கூறியுள்ளனர்.

Categories

Tech |