தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக கொரோனா தொற்று சற்று சீரடைந்து வருகிறது. இதனால் தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது மார்ச் 3 (நாளை) முதல் வரும் 31-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை முதல் விலக்கிக் கொள்ளப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.