தமிழகத்தில் கடந்த வருட இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெரும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியிருந்தனர்.
அந்த வகையில் பொதுத்தேர்வுக்கான வேலைகளும் மும்முரமாக நடந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் 10, 11, 12,-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இதில் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5-ம் தொடங்கி மே 28-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5- மொழிப்பாடம், மே 9-ஆங்கிலம், மே 11- கணினி அறிவியல், பயோ கெமிஸ்ட்ரி, புள்ளியியல், அரசியல் அறிவியல், மே 13- வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல், மே 17- கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், வேளாண்மை அறிவியல், நர்சிங், மே 20- இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம், மே 23- உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல், மே 28- தொழிற்பாடத்தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,