பொதுமக்களுக்கு ஆயுர்வேதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கில் ஆரோக்கிய வனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மாளிகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்கிய வனத்தை, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் திறந்து வைத்துள்ளார். இது சுமார் 6.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மேலும் இந்த ஆரோக்கிய வனம் மனித வடிவில் மற்றும் யோக முத்திரையில் அமர்ந்திருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆரோக்கிய வானத்தில் சுமார் 215 மூலிகைகளும் தாவரங்களையும் கொண்டு பல்வேறு நோய்களின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நீரூற்றுக்கள், யோகா மேடை, நீர் கால்வாய், தாமரை குளம் உள்ளிட்டவை ஆரோக்கிய வனத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு ஆயுர்வேத தாவரங்களின் முக்கியத்துவத்தையும் மற்றும் அதன் நன்மைகளையும் எடுத்துரைக்கும் நோக்கில் இந்த ஆரோக்கிய வனம் உருவாக்கப்பட்டுள்ளதாக ராஷ்டிரபதி பவன் தெரிவித்துள்ளது. இதை அடுத்து ஆரோக்கிய வனத்தை காண பொதுமக்களும் வரலாம் என்று கூறப்பட்டுள்ளது.